கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-12 11:06 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் முதியோர்கள் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் குறைந்தபட்ச ஓய்வூதியம் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் ஏராளமான கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேகர் போக்குவரத்து கழக சங்கத்தின் மண்டல செயலாளர் பவுல்ராஜ், மற்றும் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திர பாபு ஜெனிஸ்ட்டர் மணி கண்ணு பிச்சை மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் பல்வேறு அரசுத்துறை சங்கங்களை சார்ந்த ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News