சிவகிரி பகுதியில் உண்டியல் உடைத்து திருடியவர் கைது

Update: 2023-11-20 12:26 GMT

உண்டியல் உடைத்து திருடியவர் கைது


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இராயகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான வழிபாட்டுத் ஸ்தலம் உள்ளது. அவ்வழிபாட்டுத்தளத்தின் கதவை உடைக்கும் சத்தம் கேட்ட அருகில் உள்ள விவசாய வேலை செய்து வருபவர்கள் சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வழிபாட்டுத்தளத்தில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்ததில், அவர் நெற்கட்டும் சேவல் அருகே உள்ள காட்டுப்புரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும் பல்வேறு இடங்களில் உள்ள ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கோவில் வழிபாட்டு தளத்தில் இருக்கும் உண்டியலை உடைப்பதும் வழிபாட்டுப் பொருள்களை திருடி சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதைக் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News