அத்துமீறி மணல் கடத்திய நபர் கைது

அரூர் அருகே டி.அம்மாபேட்டையில் அத்துமீறி மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-23 07:01 GMT
 அரூர், டிச.23: அரூர் அருகே கோட்டப்பட்டி எல்லைக்கு உட்பட்டடி.அம்மாபேட்டை பகுதியில், மணல் கடத்தப்படுவதாக, கோட்டப்பட்டி எஸ்ஐ விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்செங்கப்பாடி- வேடகட்டமடுவு பிரிவு சாலையில், மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்த போது, உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை.மணலுடன் பறிமுதல் செய்து, மணல் கடத்திய டிரைவர் மற்றும் உரிமை யாளர் டி.அம்மாபேட்டையை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஒரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News