மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது!
மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பூரை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 07:23 GMT
மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது
இலுப்பூர் சின்னக்கடை வீதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பூரை சேர்ந்த ராமலிங்கம் என்பரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.