கால் இடறி பாலத்திலிருந்து விழுந்தவர் பலி

நத்தம் அருகே தரைப்பாலத்திலிருந்து கால் இடறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-03-28 07:36 GMT

பைல் படம் 

நத்தம் அருகே சிறுகுடி பிலாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (31). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் அருகேயுள்ள தரைப்பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் எதிர்பாராதமாக கால் இடறி பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்த புகாரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News