மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-19 11:30 GMT
காவல் நிலையம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தி. ஏந்தல் கிராமத்தில் அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இது குறித்து ராமநத்ததம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.