வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சங்ககிரியில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-22 15:17 GMT

போராட்டத்தில் ஈடுபட்டனர் 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும்

, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சங்ககிரி வட்ட கிளை தலைவர் மகேந்திரன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செயலாளர் கவிதா பொருளாளர் முருகன், துணைத்தலைவர் ராஜீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, வட்டாட்சியர் அறிவுடைநம்பி, தனிவட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சாஜிதாபேகம், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, வருவாய் ஆய்வாளர் கீதா, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News