தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

சேங்காலிபுரத்தில் தந்தையை அறிவாளால் வெட்ட முயன்ற மகன் மீது குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-23 09:32 GMT

தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் சேட்டு மேட்டு தெருவை சேர்ந்த ராமசாமி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி ராணியிடம் தினசரி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராணி சேங்காலிபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் .இந்நிலையில் ராமசாமியின் தந்தை காசிதுரை இவர்களை பார்க்க வந்துள்ளார். இந்நேரத்தில் ராமசாமி வந்துள்ளார் .இதனை தொடர்ந்து தனது தந்தை காசிதுரையிடம் தனது சொத்தை உடனடியாக பிரித்து தருமாறு கேட்டு தகராறியில் ஈடுபட்டுள்ளார் . தொடர்ந்து அருகே இருந்த அருவாளை எடுத்து தந்தையின் கழுத்தை வெட்ட முயற்சித்துள்ளார் . இதனை தடுக்க முயன்ற ராமசாமியின் மனைவி ராணியும் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இது குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார் இதனையடுத்து கணவர் ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News