சாலை கிராமத்தில் தாயின் கண்களை தானமாக வழங்கிய மகன்

சாலை கிராமத்தில் தாயின் கண்களை தானமாக வழங்கிய மகனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2024-05-06 09:47 GMT

கண்களை தானமாக வழங்கிய மகன்

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தை அடுத்த கோடனூர் சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது தாயார் அந்தோனியம்மாள். இவர் உடல்நலகுறைவு காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்தோனியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் மகனிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் தன்னுடைய தாயாரின் இரு கண்களையும் மகன் சரவணன் தானமாக வழங்க முடிவு செய்து அதனை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்த நிலையில் அந்தோனியம்மாளின் கண்கள் மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றுக்கொண்டனர்.

தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் கண்களை சரவணன் தானமாக வழங்கியது பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags:    

Similar News