தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்தை விரைவில் அமுல்படுத்த வலியுறுத்தி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் 15000 விவசாயிகள் பங்கேற்றனர்.

Update: 2023-11-28 13:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் பகுதியில் சிப்காட் அலகு மூன்றினை விரிவாக்கத்தை தொடங்கிட வலியுறுத்தி தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் 15,000 மேற்பட்டோர் மேல்மா கூட்டு சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு சிப்காட் விரிவாக்கமாக 3வது அலகு திட்டத்திற்கு மேல்மா, குறும்பூர், நர்மாப்பள்ளம், தேத்துறை, வீரம்பாக்கம், இளநீர் குன்றம், அத்தி உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த பகுதியில் 3174 ஏக்கர் பரப்பளவு நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது.

இந்த நிலையில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் தங்களின்; வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக நிலம் கையகப்படுத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்தை கைவிட கோரி ஒன்பது கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து 125 நாட்களாக காத்திருப்பு சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் மூலமாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்து கைதாகி சிறைக்கு சென்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மகளிர் அமைப்பினர் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்மா கூட்டுச்சாலை பகுதியில் சிப்காட் அமைக்க தமிழக அரசுக்கு ஆதரவாக நிலத்தை எடு வேலையை கொடு என்று கோஷமிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து மேல்மா கூட்ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து அதே கோரிக்கையை முன்வைத்து தாலுகாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சிப்காட் விரிவாக்கம் செய்யப்படும் 9 கிராமங்களின் வழியாக சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பைக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மேல்மா பகுதியில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் அம்மை அப்பர் உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

Tags:    

Similar News