வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கருணாநிதி காலனியில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-24 08:51 GMT
பலியான இளைஞர்
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் கஜேந்திரன் வயது 28. தனியார் செல்போன் நிறுவன மேலாளராக வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக கஜேந்திரன் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து கஜேந்திரன் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.