டிராக்டர் சாலையின் நடுவே உடைந்து சிக்கிய பரிதாபம் !

ஆத்தூர் அருகே வீடு கட்டுவதற்காக டிராக்டரில் எம்செண்ட் ஏற்றி சென்ற போது கான்கிரீட் சாலை உடைந்து சாலையின் நடுவே சிக்கிய பரிதாபம். முறையான கான்கிரீட் சாலை அமைக்க கோரிக்கை.

Update: 2024-03-04 07:18 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி நான்காவது வார்டு சரஸ்வதி பள்ளி பின்புறம் உள்ள காங்கிரட் சாலை வழியாக வீடு கட்டுவதற்காக எம்செண்ட் ஏற்றி சென்ற டிராக்டர் காங்கிரட் சாலை உடைந்து பின்பக்க டயர் சிக்கியது.பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டர் அகற்றப்பட்டது. அப்பகுதி மக்கள் முறையான கான்கிரீட் சாலை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News