தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
விராலிமலை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-14 07:14 GMT
பைல் படம்
விராலிமலை தாலுகா பாட்னா பட்டியை சேர்ந்தவர் பிரபு (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் சங்கீதா கோபித்துக் கொண்டு. பிள்ளைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.