குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Update: 2024-06-01 05:02 GMT

குண்டா் தடுப்புச் சட்டம் 

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டை இ.பி. சாலை மதுரம் மைதானம் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை கொல்ல முயன்றதாக தாராநல்லூரைச் சோ்ந்த பு. ஆறுமுகம் (22) உள்ளிட்ட மூவரை கோட்டை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில், ஆறுமுகம் மீது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஆறுமுகத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
Tags:    

Similar News