திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் திருட்டு: போலீசார் விசாரணை

திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Update: 2023-12-19 10:00 GMT
திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை வகுப்பு கள் முடிந்ததும் மாலையில் ஊழியர்கள் பள்ளியை பூட்டி சென்ற னர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது பள்ளியின் கேட் டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டர் மெஷினை திரு டிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரோசணை போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி னர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இது குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிண் டர் மெஷினை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Tags:    

Similar News