கடைகளில் திருட்டு - போலீசார் விசாரணை

தென்காசி அருகே கடைகளில் நடைப்பெற்ற திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-06 08:14 GMT
தென்காசி அருகே கடைகளில் திருட்டு போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் , கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி மெயின்ரோட்டில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே ரோட்டில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் கடையில் உள்ளே பார்த்தபோது கல்லாவில் பணம் செல்போன் பல பொருட்கள் திருட்டுப் போய் உள்ளனர். இதை கண்ட அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் கடையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் பிரிந்து சென்ற போலீசார் கடையில் கொள்ளை அடித்து சென்ற மரபு நபர்களை சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை அவர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News