நிதி நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலத்தில் நிதி நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2024-02-16 06:59 GMT

மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலம் அரியானூர் பகுதி ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 30). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசில் தமிழரசன் புகார் செய்தார். அதன் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News