சோத்துப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீஅஞ்சூரம்மனுக்கு திருக்கல்யாண விழா

சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅஞ்சூரம்மனுக்கு திருக்கல்யாண விழா நடந்தது.

Update: 2024-05-24 10:31 GMT

திருகல்யாணம்

செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அஞ்சூரம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரத உற்சவம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு ரத உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ அஞ்சூரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு,

பின்னர் மேல தாளம் முழங்க ஸ்ரீ அஞ்சூரம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி அம்மனை மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்ய கயிறு, குங்குமம், வழங்கப்பட்டது.

இந்த திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News