இந்தியா கூட்டணி நிர்வாகிகளை சந்தித்த திருமாவளவன்

ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளரும்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து கௌரவித்து வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-27 02:14 GMT

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்  திருமாவளவன்  

ஜெயங்கொண்டத்தில், இந்தியா கூட்டணி சார்பில், திமுக மாவட்ட செயலாளரும்,  போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர்  தலைமையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் , பின்னர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கௌரவித்தார்.மேலும் நிர்வாகிகளிடம் தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறும், அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், நகரச் செயலாளர் கருணாநிதி, நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இளையபாரதி, சிவா, சின்னராசா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர  நிர்வாகிகளும்,தமிழர் நீதி கட்சி தலைவரும் ஏர் உழவர் சங்க நிறுவனமான சுபா இளவரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மணிவேல், வெங்கடாசலம், பரமசிவம், ராதாகிருஷ்ணன், அம்பிகா மாவட்ட குழு உறுப்பினர்கள் பத்மாவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட தோழமைக்கட்சிளின் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், மதிமுக நிர்வாகிகள், தி.க கட்சி நிர்வாகிகள், திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News