பிரஹன்னநாயகி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருவாவடுதுறை ஸ்ரீ பிரஹன்னாயகி அம்மன் 69 ஆம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நடைப்பெற்றது.

Update: 2024-04-17 07:10 GMT
ஊஞ்சல் உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை வடக்கு மட வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரகன்னநாயகி அம்மன் திருநடன உற்சவமானது நடைபெற்றது. முன்னதாக கடந்த ஏழாம் தேதி காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தது தொடர்ந்து எட்டாம் தேதி காப்பு காப்பு கட்டுதலுடன் அம்பாள் திருநடன உற்சவம் புறப்பாடு நடைபெற்றது,பத்தாம் நாளான இன்று திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News