ஜெகதாபி குளத்தில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

ஜெகதாபி குளத்தில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-29 08:38 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஜெகதாபி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜனவரி 27 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தில், பணம் வைத்து சூதாடுவது உறுதி செய்யப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜெகதாபி தெற்கு தெருவை சேர்ந்த வெற்றிவேல், கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூ.250-யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News