ஜல்லிப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது
ஜல்லிப்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோப்பு படம்
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, ஜல்லிப்பட்டி பகுதியில் பணம் வைத்த சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், ஜனவரி 13-ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் ஜல்லிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசன், ராமன், முருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 250யும் பறிமுதல் செய்தனர்.
பின்னர்,மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.