கருநல்லி கவுண்டனூரில் பணம் வைத்து சூதாடிய மூவர் கைது - ரூ. 650 பறிமுதல்

கருநல்லி கவுண்டனூரில் பணம் வைத்து சூதாடிய மூவர் கைது - ரூ. 650 பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை

Update: 2024-01-01 11:38 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கருநல்லி கவுண்டனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணி அளவில், கருநல்லியா கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கருநெல்லியா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ் மற்றும் ஜெகதாபி அல்லாலிக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர்,அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 650-ஐயும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News