நண்பனை கொலை செய்த மூன்று பேர் கைது
நண்பனை கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 16:14 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி குடிசை வீட்டில் இருந்தபோது, வீடு எரிந்து உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொலையா? தற்கொலையா? என ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் கொலையில் தொடர்புடைய டில்லிபாபுவின் நண்பரான, சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை , கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ராஜன், ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.