முள் தோட்டத்தில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது !

முள் தோட்டத்தில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல் செய்தனர்.

Update: 2024-07-08 06:57 GMT

சூதாட்டம்

முள் தோட்டத்தில் பணம் வைத்த சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200 பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொளந்தா கவுண்டன்புதூர் அருகே பணம் வைத்து சூது ஆடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அருள்முருகனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 6 ஆம் தேதி இரவு 7:45- மணியளவில், கொளந்தா கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, ராசாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, அதே போல கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த வீராசாமி, பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 யும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News