கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

கோதூர் பாலம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.

Update: 2023-11-06 10:59 GMT

காவல் நிலையம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கோதூர் அன்னபூர்ணா பாலம் அருகே பணம் வைத்த சூதாடுவதாக தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முரளி கிருஷ்ணன் கோதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அன்னபூர்ணா பாலம் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் புகழூர் தாலுக்கா, மேற்கு தெரு செம்மடபாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல், கரூர் வடிவேல் நகர், எல்.என். எஸ், சக்தி நகர், முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்த லட்சுமண பிரசாத் 23, கரூர் வேலுச்சாமிபுரம் கோதூர் சி.கே.ஏ.நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்ஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு மூன்று பேரையும் கைது செய்து,

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து,பின்னர் காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும் ரூ.150 யும் பறிமுதல் செய்தனர்.வெங்கமேடு காவல் துறையினர்.

Tags:    

Similar News