மூன்று கடைகள் அடுத்தடுத்து தீ விபத்து !

புதுக்கோட்டை மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கடைகள் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update: 2024-03-25 04:50 GMT

 தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள சந்தைபேட்டை பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் இருந்து வருகின்றன. இந்த வணிக வளாகங்களில் உள்ள ஒரு கடையில் அதிமுக நகர பொருளாளர் சோலைராஜ் என்பவருக்கு சொந்தமான பாத்திர கடை மற்றும் வெடிக்கடை செயல்பட்டு வருகிறது. அவருடைய கடைகளுக்கு அருகே நகைக்கடை உள்ளிட்ட மற்ற கடைகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை நகைக்கடையில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஏற்படட தீயானது பாத்திரக்கடை மற்றும் வெடிக்கடையில் பரவியது. மேலும் வெடிக்கடையில் இருந்த வெடிகள் அதிக அளவு சத்தத்துடன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட கரும்புகையால் அந்த வணிக வளாக முழுவதும் தீயால் சேதம் அ அடையத் தொடங்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவித்த நிலையில் ஆவுடையார் கோவிலில் இருந்து கூடுதலாக மற்றொரு வண்டி கொண்டுவரப்பட்டது. இரண்டு தீயணைப்பு துறை வாகனங்களும் தீயை அனைக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றனர் மேலும். இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ள நிலையில் அறந்தாங்கியில் முக்கிய நகர்ப்பதியில் ஏற்பட்டுள்ள தீ சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எந்தவித உயிர் சேதமும் இல்லாத இந்த திடீர் தீ விபத்தால் வெடிக்கடை மற்றும் பாத்திர கடை, நகை கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News