குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல்!

கறம்பக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளை மூடி சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-07-03 04:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.‌

இந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரெங்கசாமி தலைமையிலான அதிகாரிகள் கறம்பக்குடி காவல்துறையினரோடு  நேற்று அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது கறம்பக்குடி அருகே நெய்வேலி ரோட்டில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, கறம்பக்குடி அருகே புதுப்பட்டியில் உள்ள அரபாத் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடை, கறம்பக்குடி பெரிய கடை வீதியில் அஜித் குமார் என்பவருக்கு சொந்தமான எஸ்பிஎம் டீ கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று கடைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News