திரௌபதி அம்மன் கோவில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் , நயினார்கோயிலில் பீம வேச வைபவம் நடைபெற்றது.

Update: 2024-03-23 15:13 GMT

திரௌபதி அம்மன் திருவிழா 

ராமநாதபுரம் மாவட்டம், சேதுபதி ராணி ஸ்ரீமதி ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியமானதும், சேதுபதி ராணி அபர்ணா நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.

இங்கு பூ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவிலில் வல்லம், கரைமேல் குடியிருப்பு, தாளையடி கோட்டை, மேமங்கலம், நயினார் கோவில், அஞ்சாமடை காச்சான், மஞ்ச கொல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பீம வேச வைபவத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இன்று நயினார் கோயில் இளைஞர்கள் பீம வேச வைபவத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மார்ச் 26ம் தேதி பூக்குழி வைபவம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி பால்குட திருவிழா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News