வளவனூர் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வளவனூர் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2024-03-26 17:19 GMT

லட்சுமி நாராயண பெருமாள்

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அக்ர ஹாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேத வல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடை பெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, உற் சவ பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆறாவமுதன் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
Tags:    

Similar News