திருக்கோவிலூர் : அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

Update: 2023-12-14 05:25 GMT

பாலமுருகன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருக்கோவிலூரில் இருந்து அரசு டவுன் பஸ் சோழவாண்டிபுரம் வழியாக ரிஷிவந்தியம் சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சோழவாண்டிபுரத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் பஸ்ஸின் பின்பக்கம் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.இதுகுறித்து பஸ் டிரைவர் கோவிந்தராஜ் நேற்று கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.



Tags:    

Similar News