திருமயத்தில் குளத்தை சுத்தம் செய்யும் பணி

திருமயத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

Update: 2024-02-15 15:05 GMT

குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள்

திருமயத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தெப்பத்தில் சேரும் சகதி அதிகமாக காணப்பட்டது. இதனை சுத்தம் தர சொல்லி அப்பகுதி பொதுமக்கள் தினமும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உடனடியாக பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க பணியாளர்களைக் கொண்டு அந்த குளத்தினை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது அந்த குளத்தில் இறங்கிய பணியாளர்கள் அந்த குளத்தில் இருந்த சேரும் சகதி பாட்டில்கள் மரக்கட்டைகள் உள்ளியவற்றை அதிலிருந்து எடுத்து அந்த பணி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணி முடிக்கப்பட்டு மாசி மாத திருவிழாவிற்கு இந்தக் குளம் பயன்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தெரிவித்தார்

Tags:    

Similar News