தேர்தல் நடத்துவது குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வாக்குச்சாவடி நிலையாளர்களுக்கு பயிற்சி கூட்டம்.

Update: 2024-03-20 18:48 GMT
தேர்தல் நடத்துவது குறித்து முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் 

திருப்பூர் மாநகராட்சி ஆணையாரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் தலைமையில் வாக்குச்சாவடிபயிற்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவது, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டில் இருந்தே வாக்களிப்பதை உறுதிப்படுத்துவது, 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு வீட்டில் இருந்து வாக்களிப்பதை உறுதிப்படுத்துவது குறித்து பயிற்சி வாக்குச்சாவடி நிலையாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில், துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், உதவி ஆணையாளர் வினோத்,தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், உதவி ஆணையாளர் (நிருவாகம்) கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News