போளூர் அருகே சாலை விபத்து - சிறுவன் உட்பட 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மதிய விபத்தில் 4வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.;
By : King Editorial 24x7
Update: 2023-11-23 03:29 GMT
சாலை விபத்தில் சிறுவன் உட்பட இரண்டு பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம் புரடை கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் செல்வம். விவசாயியான இவரும் தங்கை மகன் தினாபாண்டிவேல் வயது 4 ஆகிய இருவரும் சொந்த வேலையாக தேவிகாபுரம் வந்து மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, தேவிகாபுரம் சந்தைமேடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே, போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், செல்வம் மற்றும் அவருடைய தங்கை மகன் தின பாண்டியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து செல்வத்தின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.