திருவாரூர் : தாட்கோ மானியத்துடன் நிலம் வாங்க விண்ணப்பம்

Update: 2023-12-12 11:17 GMT

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில் அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது . இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News