கள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது - 6 லிட்டர் கள் பறிமுதல்

வெள்ளியணை அருகே தென்னந்தோப்பில் கள் இறக்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-01 02:49 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காளியப்ப கவுண்டனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கள் விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காளியப்ப கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திலக். அப்போது, அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கள் விற்பனை நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத கள் விற்பனையில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், வையாபுரி கவுண்டனூர், புது தெருவை சேர்ந்த கருப்பசாமி வயது 30 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். பின்னர் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News