ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-03-05 09:53 GMT

மாவட்ட ஆட்சியர் 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாம் புதன் கிழமை தாளவாடியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகள் தொடர்பான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீலநிறம்),

ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News