தொழுதூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் ஆட்டோ இயக்க அனுமதி தர வேண்டும் தொழுதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

Update: 2024-02-06 05:49 GMT

ஆட்டோ ஓட்டுனர்கள் மனு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர், ராமநத்தம் பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ஜீவா ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தங்கராசு, தலைமையில், பிப்ரவரி 5ஆம் தேதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அதில், பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை, லப்பைகுடிக்காடு ஆகிய ஊருக்கு ஆட்டோக்களை இயக்கும்போது RTO, மற்றும் போலீசார் அபராதம் வசூலிப்பதாகவும்,

அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில ஊர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆட்டோக்கள் இயக்குவதற்கு அனுமதி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க சென்றனர்.

இந்த மனு வழங்கும் நிகழ்ச்சி என்பது ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News