சங்கரன்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயணம்

சங்கரன்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2024-04-18 09:09 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியே வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடி இயந்திரங்கள், பென்சில், ரப்பர்,பேனா,அழியாத மை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்களை கனரக வாகனம் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.

மேலும் ஓட்டுப்பட்டி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களும் இணைந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரையில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News