மணிமுத்தாறு அருவியில் அனுமதி - மகிழ்ச்சியில் மக்கள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-04-26 06:38 GMT

மணிமுத்தாறு அருவி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அருவியாக மணிமுத்தாறு அருவி உள்ளது. இந்த அருவியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பராமரிப்பு பணிக்காக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று (ஏப்.26) காலை 8 மணி முதல் மதியம் 3 வரை வனத்துறையினர் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்த அனுமதியை தொடர்ந்து காலை முதல் அப்பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இன்பமுடன் குளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News