ஐந்தருவியில் மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்

Update: 2023-12-21 09:07 GMT

சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இன்று ஐந்தாவது நாளாக பிரதான அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று ஐந்தருவியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் நின்று மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News