சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 05:49 GMT

 சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுருளி தீர்த்தத்தில் இருந்து பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் காட்டு யானைகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் உலாவினர். இதனால் தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News