மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Update: 2024-06-01 08:05 GMT

 டிராக்டர் பறிமுதல்

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளம்பார் வழியாக சென்ற டிராக்டர் டிப்பரை நிறுத்தினர். போலீசை பார்த்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடினார். உடன், போலீசார் சென்று பார்த்ததில் மணல் கடத்திச் சென்றது தெரிந்தது. தொடர்ந்து 1 யூனிட் மணலுடன் இருந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் வேல்முருகன், 29; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News