சீத்தப்பட்டி காலனி பைக் மீது டிராக்டர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

சீத்தப்பட்டி காலனி- முன்னாள் சென்ற டிராக்டர் திடீரென வலது புறம் திரும்பியதால், பின்னால் வந்த டூ வீலர் மோதி உயிரிழந்தார்.;

Update: 2024-05-27 16:11 GMT

காவல் நிலையம்

சீத்தப்பட்டி காலனி- முன்னாள் சென்ற டிராக்டர் திடீரென வலது புறம் திரும்பியதால், பின்னால் வந்த டூ வீலர் மோதி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணபுரம் அருகே உள்ள ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் வயது 38. இவர் மே 26 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட , சீத்தப்பட்டி காலனி அருகே வந்தபோது, இவருக்கு முன்பாக சீ்த்தப்பட்டி காலனியை சேர்ந்த சின்னசாமி வயது 40 என்பவர் ஓட்டி சென்ற டிராக்டர்,

Advertisement

எவ்வித சிக்னலையும் வெளிப்படுத்தாமல் திடீரென வலது புறம் திருப்பியதால், பின்னால் வந்த கோபிநாதன் வாகனம், டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த கோபிநாதனை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த கோபிநாத்தின் மனைவி விஜி வயது 35 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த கோபிநாதனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படும் வகையில் டிராக்டரை ஓட்டிய சின்னசாமி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News