நாகர்கோவிலில் லாரி மோதி வியாபாரி உயிரிழப்பு 

நாகர்கோவில் அருகே லாரி மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி லிங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-06-13 03:54 GMT

பைல் படம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டு விளை என்ற இடத்தை  சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (53). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவ தினம் மாலை வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து ஒழுகினசேரியில் உள்ள மார்க்கெட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.      அப்போது முன்னால் ஒரு அரசு பஸ் சென்றது பஸ்ஸின் பின்னால் லிங்கேஸ்வரன் மெதுவாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்ற ஒரு சிமெண்ட்  லாரி லிங்கேஸ்வரன் பைக் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி லிங்கேஸ்வரன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.  

     மேலும்அந்த லாரி லிங்கேஸ்வரனை மோதி விட்டு தம்பதிகள் சென்று கொண்டிருந்த  மற்றொரு பைக்கில் மோதி விட்டு நின்றது. இதில் அவர்கள்  இருவரும் காயம் அடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதி சேர்ந்த கண்ணன் (34) என்பவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News