சாலை சீரமைக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் சாலையை சீரமைக்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-27 11:50 GMT
அஞ்சுகிராமத்தில் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் அஞ்சுகிராமசம் சந்திப்பில் பழுதடைந்த சாலை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      ஆர்ப்பாட்டத்திற்கு வியாபாரிகள் நலச் சங்க தலைவர் வஸிம் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெசிம், வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் கனகராஜ், ஊர் நலச் சங்கத் தலைவர் ஹிட்லர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.         சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் தம்பிதங்கம், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், அஞ்சுகிராமம் பேரூர் அதிமுக செயலாளர் ராஜபாண்டியன், மருங்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி சீனிவாசன் உட்பட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News