பாரம்பரிய விளையாட்டுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கல்

காணியாலம்பட்டியில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பரிசு வழங்கினார்.

Update: 2024-01-13 09:53 GMT

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை பார்வையிட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள காணியாலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா வது விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பாரம்பரியமிக்க நமது தமிழர்களின் விளையாட்டான பல்லாங்குழி விளையாடுதல், சில்லாக்கை பயன்படுத்தி நொண்டி விளையாட்டு, கற்களை கையில் வைத்துக் கொண்டே மேலும் அதே கையில் கற்களை சேர்க்கும் கல்லாங்கல் விளையாட்டு, ஆடு புலி ஆட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடினர்.

இந்த விளையாட்டினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News