திருக்குவளையில் மகளிர் சுய உதவி குழுவுக்கு பயிற்சி வகுப்பு
திருக்குவளையில் மகளிர் சுய உதவி குழுவுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருக்குவளையை அடுத்த திருவாசலில் சேவாலயா தொண்டு நிறுவனம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் மகளிர்சுய உதவி குழுப்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இந்த பயிற்சியை சேவாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவர் திரு . முருகப்பெருமாள் அவர்கள் தலைமையேற்று நடத்தினார் .
நாகை மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் திரு விஸ்வாந்த கண்ணா மற்றும் நாகை மாவட்ட முன்னோடி வங்கி நிர்வாகிகள் பாரன்சாஹி மாவட்ட நிதிசார் அலுவலர் திரு. நாகூர் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி கொடுத்தார்கள். இந்த பயிற்சியில் அரசு திட்டங்கள் மற்றும் வங்கிகள் சலுகை குறித்தும் மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கமாக கூறி அனைவரும் திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இந்த அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் சேவாலய தொண்டு நிறுவனத்தின் அலுவலர்கள் திரு பாரதிமோகன் திரு பார்த்திபன் திரு. செல்வராஜ் திரு.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.