வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட திருநங்கைகள் !

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் கலெக்டருடன் தேர்தல் வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-03-20 06:10 GMT

திருநங்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் கலெக்டருடன் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட திருநங்கைகள். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் திருநங்கைகள் வாக்காளர்களின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றி மதம், இனம், சாதி, சமூக தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் தூண்டுதல்கள் இன்றியும் என்றும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்வில் திருநங்கையின் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News