ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 62, 300 பறிமுதல்

சங்கரன்கோவிலில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 62, 300 பறிமுதல்

Update: 2024-03-22 02:44 GMT

பறிமுதல்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமநாதபுரம் விலக்கில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையாா் நத்தத்தை சோ்ந்த வையண்ணன் மகன் ராதாகிருஷ்ணன் என்பவா் உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.62,300 கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து தோ்தல் அதிகாரிகள் ரூ. 62,300 பறிமுதல் செய்து அதை சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
Tags:    

Similar News